தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் விரைவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.