பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி, மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஏன் ஆவின் பாலை விற்க முடியாது?, மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால் கையாள முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பால் விநியோகத்தை பாட்டிலுக்கு மாற்ற மக்களிடம் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என ஆவின் அறிக்கை அளித்தது. ஆவின் அறிக்கையால் நீதிபதிகள் அதிருப்தி புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.