மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு அண்ணன் பேசும்போது கூட சொன்னார். வருண பகவான் வரப்போகிறார் என்று ? எனக்கு அதுல நம்பிக்கை கிடையாது. இயற்கை என்று சொல்லி இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை,  அவருடைய நம்பிக்கை. அவர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்…

இருந்தாலும் கலைஞர் உடைய நூற்றாண்டை பார்ப்பதற்கு வருணபகவான் வந்தாலும் நாங்கள்  வருக – வருக என்று வரவேற்போம். இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு மிக மிக சிறப்பு உண்டு. இங்கே மேடைக்கு வந்தது பிறகுதான் நானே பார்த்தேன். இந்த பக்கம் சர்ச,  அந்த பக்கம் மசூதி. இந்த இரண்டுக்கு நடுவுல இவ்வளவு சிறப்பான ஒரு ஏற்பாடு செய்துள்ளனர்.

நான் கிழக்கு மாவட்டத்திற்கு நிறைய நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். சேகர்பாபு அண்ணே என்னை சும்மாவே விட மாட்டாரு. மாசத்துக்கு ஒரு நிகழ்ச்சி.. கிழக்கு மாவட்டத்திற்கு சேகர் பாபு அண்ணன் கூட்டிட்டு வந்துருவாரு. வடக்கு மாவட்டத்துக்கு ரொம்ப நாளா தேதி கேட்டுட்டே இருந்தாங்க. நான் சொன்னேன்..

உங்க கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு அண்ணன்கிட்ட நீங்க ஒரு தேதியை வாங்கிட்டு வாங்க. அவருடைய ஏற்பாட்டில் உங்களுக்கு ஒரு தேதி கொடுத்துவிடுகிறேன் என சொன்னேன். அப்படி சேகர்பாபு அண்ணன் பரிந்துரை பண்ணி,  இன்னைக்கு இந்த நிகழ்ச்சி நடந்துகிட்டு இருக்குது. அதற்கு நான் அண்ணன் சேகர்பாபு அண்ணனுக்கும் சேர்த்து நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.