கட்சி கூட்டத்தில் பேசிய சீமான் ஏர்போர்ட்டிற்கு போனாலே ஒரே செல்ஃபி தொல்லைதான் இருக்கிறது. உக்கி போடுவது போல் ஒருவர் வந்து செல்ஃபி எடுத்துவிட்டு சென்ற உடன் உக்கார செல்லும்போது மற்றொருவர் செல்ஃபி கேட்பார். சாரி அண்ணே உங்களை உட்கார விடாம போட்டோ எடுத்துட்டு இருக்கோம் என கூறுவார்கள்.

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக்காரர் யாரு இவரு?எதுக்கு எல்லாரும் இவரு கூட செல்ஃபி எடுக்குறீங்க? என கேட்டார். அதற்கு இவர்தான் நாம் தமிழர் கட்சியுடைய தலைவர் என கூறியவுடன், நானும் உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளட்டுமா என கேட்டதாக சீமான் கூறியுள்ளார்.