மக்களவைத் தேர்தல் நடந்து முடிவதற்குள் திமுகவின் முக்கிய தலைவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இதை தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசியலின் அனில் கும்ப்ளே தான் அண்ணாமலை, பாத யாத்திரையை அவர் தொடங்கிய போது செந்தில் பாலாஜி விக்கெட் விழுந்தது. திமுகவின் 10 விக்கெட்டுகளை சாய்த்து தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் வெற்றியை அவர் பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.