நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரி நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சமீப காலமாக அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் கஸ்தூரி, திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் அவர் எடப்பாடியை சந்தித்து பேசி இருப்பது அதிமுகவில் இணைகிறாரா உள்ளிட்ட கேள்வியை எழுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் முக்கிய கட்சிகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.