ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தகுதி மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.