மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை தொடங்கப்பட்டு 4 நாட்களான நிலையில், நேற்று (ஜன,.3) வந்தேபாரத் ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அப்பகுதியில் இருந்த மர்மநபர்கள் ரயிலின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். இவற்றில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் ரயிலின் வெளிப்புறங்களும் பலத்த சேதமடைந்தது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் ஏற்கனவே அதே பகுதியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.