பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவட்டா நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். கடந்த வாரம் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர்களில் அதிகமானோர் போலீசார் என்பது நினைவுகூறத்தக்கது. அதனால் தற்போது நடந்த இந்த குண்டுவெடிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.