கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின் தாய் மில் வேலைக்கு சென்று தனது இரண்டு பெண் குழந்தைகளும் படிக்க வைத்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்த பாலசுதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலசுதாவில் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார். அதில் என்னால் இதுவரை நடந்த தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை. எனது அம்மா கஷ்டப்பட்டு பீஸ் கட்டி எங்களை படிக்க வைத்து வருகிறார். ஆனால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. தங்கை புவனேஸ்வரியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.