கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய் தனது மகளிடம் விக்னேஸ்வரனுடன் இனிமேல் பேசக்கூடாது என கூறினார். இதனால் இருவரும் பேசாமல் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு காதலியின் வீட்டிற்கு சென்ற விக்னேஸ்வரன் காதலியின் தாயுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் விக்னேஸ்வரன் காதலியின் தாயை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த இளம் பெண்ணின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.