சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

விட்டு விட்டு மழை பெய்வதால் பள்ளி செல்லும் மாணவர்களும்,  அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் மழைக்காலத்தில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.