அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் மூன்றாவது குழந்தை தேவையில்லை என நினைத்து கர்ப்பத்தை கலைப்பதற்காக மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி ரமணா தின்றதாக தெரிகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ரமணாவை உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் குழந்தையை அகற்றி ரமணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமணா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.