சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு இளம்பெண்ணின் அதிரடி ஹை-வோல்டேஜ் டிராமா வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு முக்கியச் சாலையின் நடுவே, இளம்பெண் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் படுத்துக்கொண்டு ஓயாமல் ரகளை செய்துள்ளார். அந்த வீடியோவில், சாலையில் மல்லாந்து படுத்திருக்கும் அந்தப் பெண்ணின் ஒரு கையில் எரியும் சிகரெட்டும், அவற்றுக்கு மிக அருகிலேயே இரண்டு மது பாட்டில்களும் சிதறிக் கிடப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அந்தப் பெண்ணைச் சாலையிலிருந்து பத்திரமாக அப்புறப்படுத்த முயன்ற போதிலும், கடும் போதையில் இருந்த அவர் யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லாமல் தொடர்ந்து அடம் பிடித்துள்ளார்.

இதனால் அந்தப் பரபரப்பான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டு, வழிப்போக்கர்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்குள்ளாகினர். இந்தத் தர்மசங்கடமான விபரீதச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் முனேந்திர சிங் தலைமையிலான போலீஸ் படை, அந்தப் பெண்ணை மீட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

மேலும், அந்தப் பெண்ணுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை (Medical Test) செய்யப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்ட இந்த போதை ரகளை காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.