இந்த வைரல் பதிவிற்கு பதிலளித்த நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, “உண்மையிலேயே இப்படி நடந்திருக்கக் கூடாது, இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாமல் பயனுள்ள தகவல்களை மட்டும் கொண்டு சேர்க்க நாங்கள் முயன்று வருகிறோம். இனிமேல் இது போன்ற அனுபவம் ஏற்படாதவாறு சிறப்பாகச் செயல்படுவோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல நெட்டிசன்கள், வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட உரையாடல் தளங்களை நிறுவனங்கள் தங்களின் விளம்பரப் பீரங்கிகளாக மாற்றி வருவதாகக் கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், சில பயனர்கள் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது தவறான ஆட்டோமேஷன் அமைப்புகளினாலோ நடந்திருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
