திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிறுகனூர் கிராமத்தில் எலி கடித்த மின்விசிறியின் வயரில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை புரட்டப்படுத்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இருளர் காலனி சேர்ந்த சகாதேவன் மற்றும் மீனா தம்பதியின் இரண்டாவது குழந்தை பேபி ஷாலினி, வீட்டின் டேபிள் மின்விசிறியின் வயரை எலி கடித்திருந்த நிலையில் அந்த வயரில் கைப்பற்று குழந்தை துடிதுடித்துள்ளது.

உடனே அக்கம் பக்கத்தினர் சகாதேவனை அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.