தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நேற்று காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.