சென்னையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை தொடர்பான புகார்கள் எழும்போது இது தொடர்பான சோதனை நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.