தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, நடிகை ரோஜா குறித்து மிக மோசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி என்னை சிலர் சித்ரவதை செய்கின்றனர். என்னுடைய  குணத்தை மதிப்பிட நீங்கள் யார்?, தெலுங்கு தேசம் கட்சி பெண்களை ஒரு விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கண்ணீர் விட்டு கதறி அழுத்தார். மேலும், அவர்கள் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.