வட மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக பனி மூட்டம் இருப்பதால் பள்ளி மாணவர்களின் நலனை கருதி டிசம்பர் 4 இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை பள்ளிகளுக்கான வேலை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அட்டவணையின் படி காலை 9.30 மணிக்கு பள்ளிகள் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.