மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தமு நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவர் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்து காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். முதலில் எதிர்பாராத மரணம் என்று காவல்துறையினர் நினைத்துள்ளனர்.

ஆனால் யோகேஷின் தலை எதில் பட்டு அடிபட்டது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரிக்க துவங்கினர். அப்போது காவல்துறையினருக்கு யோகேஷ், ரவீந்திர கிரி என்பவருடன் மது அருந்தியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ரவீந்திர கிரியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது யோகேஷின் மனைவியின் மீதான ஆசையில் அவரை கல்லால் அடித்து கொலை செய்ததை ரவீந்திர கிரி ஒப்புக்கொண்டுள்ளார்.