தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 27 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனே மாணவர்கள் விண்ணப்பியுங்கள்.