கோவை மற்றும் பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய இணை எல். முருகன் தெரிவித்துள்ளார். அம்ரி பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல ரயில்வே திட்டங்களை கொண்டு வர உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.