தமிழக அரசு மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள் மருந்து சீட்டில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வாறு வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.