விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுத இருப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருக்கிறார். அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் விஜயதாரணி எம்எல்ஏ பதவி பறிபோகும். இதனால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறையும்.