நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, மன்னித்து விடுங்கள் அப்பா, இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.