மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.