இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினரின் மத்தியில் மாரடைப்பு ஏற்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டில் தனது சகோதரியின் திருமணத்தில் ஹல்டி விழாவில் ரிம்ஷா என்ற 18 வயது இளம்பெண் நடனமாடியுள்ளார். அப்போது சில வினாடிகளுக்குப் பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

பிறகு சிறுவன் ஒருவனின் கையைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து விழுந்தார். பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.