அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கற்பகவல்லி கடந்த ஆண்டு உயிரிழந்தார். இருவரும் சேர்ந்து வாழும் போதே நீ என்னை விட்டு பிரிந்து விட்டால் உனக்காக நான் கோவில் கட்டுவேன் என தனது மனைவியிடம் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கூறியபடியே மனைவியை புதைத்த இடத்தில் கோவில் கட்டி அவர் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இவரின் இந்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.