நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது.

இதில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறுவனுக்கு முகத்தில் தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது‌. மேலும் இதுபோன்ற நாய் கடி சம்பவங்கள் அடிக்கடி தொடரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.