சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டுவதற்காக இரவில் வெளியே சென்று விடுவார். இதனால் இரவு நேரத்தில் தன் குழந்தைகளுடன் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டம் கிடைப்பதற்காக அவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென போதை ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன இளம் பெண் கூச்சலிட முயன்ற போது சத்தம் போட்டால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் இளம் பெண் கூச்சலிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்த தகவலின் பேரில் கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் (38) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.