ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி என்னை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு என்னை அடிக்கடி சந்திப்பார். அப்போது எனக்கு 18 வயது. அந்த சமயத்தில் என்னை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அவருடைய நண்பர் தனுஷ் (20) செல்போனில் வீடியோ எடுத்தார். அதன் பிறகு தனுஷ் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை சமய சந்துரு செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் இருவரும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதேபோன்று 17 வயது சிறுவன் ஒருவனும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி என்னுடன் உல்லாசமாக இருந்தான். அவர்கள் சொன்னபடி கேட்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறியதால் நானும் பயந்து போய் அவர்கள் கூறியபடியே செய்தேன். இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பணம் மற்றும் நகை கேட்டு என்னை மிரட்டினர். ஆனால் நான் அதை கொடுக்க மறுத்ததால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனுஷ் மற்றும் சமய சந்துரு ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் 17 வயது சிறுவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.