கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் (65) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணசாமி (55) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குள்ளஞ்சாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.