சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதனால் பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், கோவளம், வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் ஜூன் மாதம் முதல் வாரம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.