நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் நவம்பர் மாதம் அருவங்காட்டில் உள்ள ஒரு இசை பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.

அந்தப் பள்ளியில் இசை ஆசிரியராக பிரசாந்த் செபாஸ்டியன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சிறுமியிடம் யாரும் இல்லாத நேரத்தில் நெருங்கி பழகியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே அவரைப் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுமி 9 வார கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து குன்னூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.