விருதுநகர் மாவட்டம் பழைய சென்னல்குளம் பகுதியில் குருசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் கணேசன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை வீட்டின் தனி அறையில் அடைத்து வைத்து குருசாமி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு அவருடைய தந்தை உணவு கொடுக்க செல்லும்போதெல்லாம் மிகவும் ஆக்ரோஷமாகி அவரை தாக்குவது வழக்கம்.

ஆனால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. இதேபோன்று சம்பவ நாளில் குருசாமி தன் மகனுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கணேசன் மிகவும் ஆவேசமாகி தந்தையை கடித்து கொடூரமான முறையில் தாக்கினார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.