கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே இரண்டு வாலிபர்கள் மது போதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஒரு வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து தப்பி ஓட முயன்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பதும், படுகாயம் அடைந்தவர் சங்கரன்கோவிலை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் ஒரே ஹோட்டலில் வேலை பார்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.