நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சவகர் ஜவகர் கூறியதாவது, நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக வந்து தங்களது குறைகளை கூறலாம். மேலும் கஞ்சா விற்பனை மற்றும் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்திற்கு நேரடியாக வர முடியாதவர்கள் அவசர உதவிக்கு 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் பெறப்பட்டுள்ள 7 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.