விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னபேராலி கிராமத்தில் பழைய இரும்பு வியாபாரியான முரளி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(10), அகல்யா(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரளி குமாரின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முரளி விருதுநகரில் கேக் வாங்கி அதன் மீது விஷத்தை தடவி தனது 2 பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் அதனை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து வீட்டிற்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.