சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.