சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூர், கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.