மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடல் எது கரை எது என தெரியாத வண்ணம் உள்ளது. மேலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.