சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சிக்னல் மற்றும் வைபை போன்றவை சரியாக வேலை செய்யவில்லை.