தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இதில் உண்மை இல்லை. அதுபோன்ற ஏதேனும் தகவல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது .