உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உண்மை தகவலை ரஷ்யா மறைத்து விட்டதாகவும், உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் எனவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.