மகன் இறந்தால் தாய்க்கும் அவருடைய சொத்தில் பங்கு கிடைக்கும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கூடாது என்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டி.என்.சுசீலாம்மா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஹெச்.பி.சந்தேஷ் விசாரித்தார்.

அவரது மகன் சிக்கமகளூரைச் சேர்ந்த சந்தோஷ் இறக்கும் போதுதான் பரம்பரைச் சொத்தில் பங்கு பெற்றதாகத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த வழக்கில் மகன் இறந்தால் கண்டிப்பாக அவருடைய தாய்க்கும் அவருடைய சொத்தில் பங்கு கிடைக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.