தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. இதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. .கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கே தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் தெலங்கானா தேர்தல் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது அடுத்த பயணத்தில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை நான் துல்லியமாக கூறுவேன். இது குறித்து ஆய்வு நடத்துவேன். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உள்ளன என தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.