இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்க மின்சார வசதி இல்லாததால் பாயில் பேப்பரில் சுற்றி குழந்தைகளை சுடுநீரின் அருகே வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.