தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.