சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் பாஜக அடையாள அட்டையை வழங்கிய அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.